25 செப்டம்பர், 2011

யாருடைய வீடு

இந்த வீடு உன்னுடையதென்று சொல்லுவதற்கு இல்லை 
ஆனாலும் நீ சொல்லிக்கொண்டு இருக்கிறாய் 
இது உன்னுடையதென்று 

பல்லிகள் , கரப்பான் பூச்சிகள் 
எல்லாமே உன் வீட்டிலுள்ளன
நீ வளர்க்கும் நாயும் 
உன் பூமரங்களும் 
உள்ளன இந்த வீட்டில் 
நீ சொல்கிறாய் இன்னும் 
இந்த வீடு உன்னுடையதென்று 

உன் நாய் அதன் இன்னொன்றிடம் 
இதைத்தன் வீடென்று   சொல்லுமே 
உன் வேலையாள் சொல்வான் 
தன் சகாவிடம் இது தன் வீடென்று.
கரப்பான் பூச்சி நினைக்கும் 
இது தன் வீடென்று.
பல்லி யோசிக்கும் 
இது தானிருக்கும் வீடென்று சிலந்தியெண்ணும் 
இது தன் வீடிருக்கும் வீடென்று 
உன்னுடைய பெண் நினைக்கிறாள் 
இது தன்னுடைய வீடென்று

இன்னும் நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய் 
இந்த வீடு உன்னுடையதென்று 



என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்