4 பிப்ரவரி, 2017

துறவறம்....

மனம் திறந்து கதறி அழ வேண்டும்.எல்லா வலிகளையும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற அகங்காரம் எங்கே தான் சென்றதோ! முடியவில்லை கண்களில் கண்ணீரைத் தேக்கிவைக்க..!

நெஞ்சத்து ஈரங்கள் வற்றிப்போனது நிம்மதியாக மூச்சை விட முடியாமல் சோகங்கள் சூழ்ந்து கொண்டு ஆட்சி செய்யும் நேரம்!

மரணத் தூதும் பயண அழைப்பு விட்டது
தொட்ட பாவங்கள் சேர்த்து வைத்த சோகங்கள் எல்லாம் மறந்து
புதிதாய் தொடர்ந்தது பூவுலக துறவறம்...
நிம்மதியை தேடி

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்