கடவுளாகவே பூமியில் உதித்தவளே அன்னை
கண்ணை விட சிறந்த உறுப்பு இல்லை
தாயோடு ஒப்பிடத்தக்க தெய்வம் இல்லை
அனைத்திலும் மேலானவளே தாயானவள்
இவ்வுலகில் மனிதராய் பிறந்து புகழ் பெற்று வாழ
வழி காட்டியவள் அன்னையே
கண்டிப்புடன் மட்டும் அல்லாமல் பாசத்தோடும் எங்களை வழிநடத்துபவள் அன்னையே
இந்த பூலோக வாழ்வை எனக்கு பரிசாக தந்ததற்காக என் உயிரிலும் மேலான தாய்க்கு நன்றி
கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது...
பாசமிகு தாயே உன்னை போற்றி பாட இந்த ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்
தாய் மடியை எப்போதும் தேடும் பாசமகளின் இதய வார்த்தைகள்
என்றும் அழியாது என் அன்னையின் நினைவுகள்
"கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக