27 ஏப்ரல், 2011

உன் மொழி தமிழ் மொழி



தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...



சிரிக்கும்போது

மட்டும் இ..ஈ...



சூடு பட்டால்

மட்டும் உ...ஊ...



அதட்டும்போது

மட்டும் எ..ஏ...



ஐயத்தின்போது

மட்டும் ஐ...



ஆச்சரியத்தின்போது

மட்டும் ஒ...ஓ...



வக்கணையின் போது

மட்டும் ஒள...



விக்கலின்போது

மட்டும் ...ஃ



என்று தமிழ் பேசி

மற்ற நேரம்

வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று...!!!

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்