11 பிப்ரவரி, 2013

பள்ளிகூடம்

Oops....:-pநேற்றுத்தானே ஜனனித்தோம் என்று எண்ணி இருந்தோம்
ஆனால் இரு படி தாண்டி இன்று பள்ளி பருவத்தை கடக்கின்றோம்
அப்பா நேற்றுத்தான் பாடசாலை வாயில் விட கதறி அடித்து வீடு ஓடினோம்
அன்று பள்ளி வா வா என்று அழைத்தது
இன்றோ பள்ளியை விட்டு வீடு செல்வதற்காக அழுகின்றோம்n
பள்ளியின் வாயில் போ போ என்று சொல்வது கேட்கிறது,
எம்மை 10 மாதம் சுமந்த தாயை சில நொடியேனும் மறக்க வைத்து 13 ஆண்டுகள் கல்வித்தாயாய் சுமந்தாயே......
பல நட்புகள் சில பகைகள் மறந்துவிடுவோமா எளிதில்
எங்கள் வாழ்க்கையை கூற முன்பு வார்த்தைகள் தேடிப்பார்ப்போம்
எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது
இனி எங்கே வார்த்தைகளை தேடுவோம்...

தாயக்கண்டோம் 
தாயவள் காட்டிய தந்தை கண்டோம்
தாய் தந்தை காட்டி இருந்த உலகைக் கண்டோம்
இருப்பினும் தொலைந்து போயிருந்த
எங்களை எங்களுக்கே அறிமுகம் செய்து வைத்தது நீதானே!

நாங்கள் இழக்கப்போகும் நினைவுகளை உனது ஒவ்வொரு அங்கத்திலும் தேடுகிறோம் தருவாயா ஒரு நாட்குறிப்பேடாக............!


கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்