11 பிப்ரவரி, 2013

நம் நட்புக்கான நினைவுகள்..

பூக்களின் புதிய மொழியாய் மலர்ந்து  நட்பு வாசல்களை திறந்தாயே..
நம் நாவுக்குள் பல நட்பை அடக்கி வைத்து பெருமை கொண்டோமே
தோழியருக்காக சேர்ந்து வைத்த வார்த்தைகள் எல்லாம் இன்று நினைவிழந்து விடுகின்றனவே!

உணர்வான சிநேகத்துக்கு உணர்விருந்தால் சொல்லுமே சிநேகிதியே நீ என்னை பிரிந்து செல்கின்ற போது நான் அனுபவிக்கப் போகின்ற வலிகள் என்னவென்று.

எங்களுக்கு பலவற்றைக் கற்றுத்தந்தாய் ஆனால் பிரிவை மட்டும் கற்றுத்தர மறந்து விட்டாயே!

நண்பர்களை மறக்கவும் முடியாமல் மறந்தது போல் நடிக்கவும் முடியாமல் உங்கள் கிறுக்கல்களை வாசித்த படி எங்களை மறந்து சிரிக்க போகின்றோம் பைத்தியக்காரர்களாக...

பிரிவுகள் நிரந்தரமற்றவை அறிவோம்
எங்களை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும்
எங்கள் மெய்யை விட்டு சுவாசம் சென்றாலும்
எங்கள் கல்லறையிலும் நம் நட்புக்கான நினைவுகளை சில்லறைகளாக சேமித்து செதுக்கி காத்திருப்போம்...நட்பே உனக்கு கடன்காரிகளாக..

எங்கள் கனவுகளாக எல்லம் வெறும் கனவுகள் அல்ல
அவை அனைத்தும் நாங்கள் வாழ்க்கை தான்!

தோழியர்களே எங்களை மன்னித்து விடுங்கள்
பள்ளியில் நான்கு சுவருக்கு செய்த குறும்புகள்  அரட்டைகள் சண்டைகள்
காயங்களைத் தந்திருந்தால் மன்னித்து விடுங்கள்
எங்களோடு நீங்கள் வந்த நட்புப்பயணங்களில் காயப்பட்டிருக்கும் உங்கள் பாதங்கள்
அதற்கு சேர்ந்து மன்னிப்புக்கேட்கிறேன்..
நம்மை மறந்து நமக்குல் நாம் நட்பு என்ற சிலையை செதுக்கியதைக் கண்டால் சிற்பியும் தோற்றுப்போவார்கள்

வானத்து நிலவும் சோகத்தில் தேய்கின்றதாம் பூமிக்கு தனக்கு போட்டியாய் இன்னோர் நிலவா என்று எங்களைப்பார்த்தும்......

அழகான நாட்களும் அழியாத சோகங்களும் தந்த் பள்ளிக்கூடமே 
கலைந்த மேகங்கள் மீண்டும் சேர்வது போல பிரியப்போகின்ற எமது நினைவுகளையும் உன்னோடு மீண்டும் சேர்த்துக்கொள்வாயா.............

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்