24 ஜனவரி, 2017

இந்த உலகம்....

பெற்றது யாரென்று
தெரியவில்லை - இனி
எப்படி வாழ்வது
புரியவில்லை

யோசிக்காமல் என்னை
பெற்றுவிட்டாள் - அன்னை
யாசிக்கும் கும்பலிடம்
விற்று விட்டாள்

தெருவிலே கையேந்த
விட்டு விட்டாய் - என்னை
கருவிலே கொல்லாமல் ஏன்
விட்டு விட்டாய் ?

வளர்க்க முடிந்தால் மட்டும்
பிள்ளை பெறுங்கள் - அன்றி
எல்லாவற்றையும் அடக்கி கொண்டு
சும்மா இருங்கள் .

பணக்காரராய் எல்லோரும்
பிறத்தல் வேண்டும் - அன்றி
பசிக்காத வயிறாவது
இருத்தல் வேண்டும் .

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்