அந்த நிமிசம் கழிந்த நினைவுகள் என் நினைவில் அலையாய் எழுந்தன!
கடந்த காலத்தில் சோகம் என்ற சொல்லை விரும்பி ஏற்ற நாட்களை எண்ணும் அளவிற்கு சிறகடித்து திரிந்தவள் நான்..இவனைப் போலவே பேசும் யாரையும் சரியாக பேசவே விடமாட்டேன்..சுட்டியாய் இருந்தேன்!இன்று என்னை நானே தேடிப் பார்க்கின்றேன்.நான் என்னுள் நானே சிரித்துக்கிறேன்...
என் புத்தகத்தில் மூடிய பக்கங்கள் எல்லாம் மீள தட்டினேன் தொலைந்த நினைவுகளைத்தேடி.
என் குடும்பம் அது அப்பா அம்மா அக்கா நான் என்று அழகாய் கிறுக்கிய ஓவியம்..எந்தக் குறையும் இன்றி எதிர்காலம் நம் கையில் என்று நிகழ்காலத்தை கழித்த நாட்களை இன்றும் மறக்க முடியவில்லை.வசதிக்கோ வாழ்வுக்கோ குறையில்லை.
அந்த நாள் சிறு தயக்கம் என் கல்லூரியின் முதல் நாள் ragging senior என்ற பயத்துடன் உள்ளே சென்றேன்."ஏய் நில்லு" என்று ஒரு சத்தம் திடுக்கிட்டு திரும்பிப்பார்தேன்."இங்க வா காலேஜ்க்கு புதுசா" என்றான் அந்த நொடி அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்க தைரியம் இன்றி தலையை மட்டும் மேல் கீழ் ஆட்டினேன்.
சரி உன் பெயர் என்ன எந்த department எந்த ஊரு என்டு listஆ கேள்வி கேட்டான்.என் பேரு மித்ரா - Computer Science Engineering சொந்த ஊரு ஏர்காடு.அவன் சொன்னான் என் ஊர்ல இருந்து இருக்கா என் கண்ணில படாமல் இருந்து இருக்கியே சரி இப்போ என் departmentல join பண்ணி இருக்க so daily கண்ணில பட்டுத்தானே ஆகணும் "சரி சரி" என்று சிரிச்சான்.
அவன்ட பேச்சும் styleம் எனக்கு அந்த நேரம் எரிச்சலாக இருக்கவே...சில விசயங்களை பொறுத்துப் போகணும் என்று அம்மா எப்பவுமே சொல்லுவாங்க.So this mithu மனதைக் கட்டுப்படுத்திடா!
அந்த நேரம் "கேஷவ்" என்று அவனை யாரோ அழைத்தாங்க! "இருடா வாறேன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
நானும் ஒரு வழியா ஒரு தொல்லையை சமாளிச்சாச்சு என்டு என் department பக்கம் போக அதே கேஷவ் வாசலில நின்றான் மறுபடியும் இவனா என்று என்னுள் புலம்பியபடி அவனைக் கடந்தேன் ஆனால் அவன் என்னைக் கண்டுக்கவே இல்லை தெரியுமா?
ஒரு குழப்பம் அங்க அப்படி பேசினான் இங்க யாரோ போல இருக்கானே என்று தான்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக