21 ஆகஸ்ட், 2021

யதார்தா!

அவனின் கோவமும் ஒருவித அழகு தான் என் மேல் காட்டாதவரை,இரசனையில் இனிக்கிறது அனுபவத்தில் கசக்கிறது!

என் சகாயன்

இன்று வரை தெரியவில்லை நாம் ஏன் இந்த நாட்களில் பேசிக்கொள்ளவில்லை என்று!
எக்காரணமின்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள்  சேர்தலும் நட்பில் மட்டும் தான் சாத்தியமா?
பிரிவு தான் புரிதலின் ஆழத்தை அளக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அளக்காதா?

கடந்து வந்த நட்பில்
பிரிவு  குறுகியதாகவே தோன்றவில்லை!
நீதான் என் உயிரினும் மேலான
ப்ரியன் என்றல்லவோ இருந்தேன்!

உன் நீண்ட மௌனம்
உன் பிரிவை எனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று என்ன சொன்னேன் என்று நீ ஏன் விட்டுப் போனாய்
என் தோழமை மறந்து சென்றாய்!


கடல்கள் நமை பிரித்தாலும்
வானம் நமை பிரித்தாலும்
இயற்கையும் சூழ்நிலையும் பிரித்தாலும்
நம் எண்ணங்கள் ஒன்றாகி
அதில் பிரிவேது தோழா
நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
இது சாத்தியமா?

6 ஜூலை, 2021

நட்சத்திர உலகின் தேவதை அவள்!

நட்சத்திர உலகின் தேவதை அவள்!
தேவலோக இளவரசனை தவமின்றி ஈன்றவளவள்!
அவள் சுவாசித்த காற்று தன்னை வேறு யாரும் சுவாசிக்க கூடாதென்று
போராட்டம் செய்து தான் இத்தனயனை தரணியில் தந்திருப்பாளோ!
அவளின் குணத்தை அவனில் காண்கின்றேன்!
சிறந்த தாயாய் இருக்கிறாள் சிறந்த மனைவியாகவும் இருப்பாள் சிறந்த மகளாகவும் இருந்து தான் இருப்பாள்!
புகைப்பட விளக்கத்தில் மகாராணி ஆக பார்க்கின்றேன்!
நேரில் பார்க்கவும் தான் ஆசைப்படுகின்றேன்!
இனிமையாக அழைக்கிறாள் "தம்பி தம்பி" என்று அந்த வசீகரத்தையே அவனுக்கும் அளித்து தான் இருக்கிறாள்.
குரலில் மட்டும் அல்ல அனைத்திலும் தான்!
முகம் காணா பேதை தான் அவள் நடத்தைகளில் வரைந்துவிட்டாள் அவளின் கடாட்ச்சங்களை என் நெஞ்சில் கல்வெட்டுகளாகவே!
என்னை நீங்கள் அறிந்து இருக்கவில்லை
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் தான் இல்லை!
எங்கும் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் தான்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா..!
நீண்ட ஆயுள் வேண்டும் என்றும் கடவுள் கூட வருவார்!

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்