27 ஏப்ரல், 2011

உன் மொழி தமிழ் மொழி



தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...



சிரிக்கும்போது

மட்டும் இ..ஈ...



சூடு பட்டால்

மட்டும் உ...ஊ...



அதட்டும்போது

மட்டும் எ..ஏ...



ஐயத்தின்போது

மட்டும் ஐ...



ஆச்சரியத்தின்போது

மட்டும் ஒ...ஓ...



வக்கணையின் போது

மட்டும் ஒள...



விக்கலின்போது

மட்டும் ...ஃ



என்று தமிழ் பேசி

மற்ற நேரம்

வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று...!!!

26 ஏப்ரல், 2011

Why GOD Gave Us Friends

GOD knew that everyone needs
Companionship and cheer,
He knew that people need someone
Whose thoughts are always near.

He knew they need someone kind
To lend a helping hand.
Someone to gladly take the time
To care and understand.

GOD knew that we all need someone
To share each happy day,
To be a source of courage
When troubles come our way.

Someone to be true to us,
Whether near or far apart.
Someone whose love we'll always
Hold and treasure in our hearts.

That's Why GOD Gave Us Friends

உன் பாதையில்.........

உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?
உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்
எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?
உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்
சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்
நின்று விடாதே
திரும்பிப் பார்
வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்... 

14 ஏப்ரல், 2011

Any man can be a father, but it takes a special person to be a dad

மறக்கவில்லை நான் எதையும்!
நான் உயரவேண்டும் என்பதற்காக
நீ குனிந்த இடங்கள் தான்
எத்தனையோ!

நான் அவதிப்படாமல் வாழ
நீ உன் கனவுகளைத்
தியாகம் செய்தது தான்
எத்தனையோ!

மாடுதன்
ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது
நீ
உன் ரத்தத்தையும்,
வியர்வையும் கலந்து
எனக்கு
வியர்வையற்ற
ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்

பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து
நம் நிலையரியாமல் நான் விரும்ப
உன் சக்திக்குமீறி வாங்கினாய்
எனக்கு ஒரு சைக்கிள்

எதிர் வீட்டில் சென்று நான்
ஒளியும் ஓலியும் பார்த்ததால்
உன் வரவுக்கு மீறி வாங்கினாய்
ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி

நான் படித்த பட்டம்
நான் இன்று இருக்கும் பதவி
எதுவும் எனதில்லை
நீ
என்னைப்பற்றி அன்று
கனவுகளின்றி இருந்திருந்தால்!!

உன் கோபம் எரிமலையைப் போன்றது
எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்
அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;
அநேக நேரம்
உன் கோபம்
நியாயத்தை நிலைநிறுத்த
புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே

உன்னைச் சர்வாதிகாரி
என்றே வர்ணிப்பேன்
பள்ளிப்பருவ நண்பர்களிடம்
ஆனால்
நீ திட்டியதும், அடித்ததும்
ஒர் சிற்பி சிலைச்செதுக்க
உளியால் பாறையை அடித்ததற்குச்
சமம் என்று உணர்ந்தேன்
பின்பு!

நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
ஒர் தகப்பனாய் கோபப்படாமல்
ஒர் நண்பனாய்
இக்கல்யாணம் எப்படியும் நடக்கும்
என்று தைரியம் சொன்னாயே
அதை நினைத்தால்
இன்றும் என்னுள் சக்திப்பிறக்குது
இமயத்தைப் புரட்டிப்போட!

நீ ஒர் நல்ல தந்தையாய்
வாழ்ந்துகாட்டிவிட்டாய்
நான் ஒர் நல்ல தமயனாய்
இருந்துகாட்ட
எத்தனைக்காலம் தான் ஆகுமோ?



என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்