23 மே, 2011

பாடசாலை

காலங்கள் மாறலாம் நேரங்கள் கழியலாம்
என் இனிய பாடசாலை நாட்கள் என்றுமே அழியாது
என் இதயத்துடிப்புக்கு அர்த்தம் தேடித்தந்தது பள்ளிக்கூடமே
பள்ளியின் முதல் நாள் எனது இறுதி நாள் வரை மறையாது
பள்ளியின் முதல் நட்பு என்றுமே அழியாது
தோழியர் கூட்டமாக பள்ளி சூழலை சுற்றியது
தோழியராய் மேடை ஏறி இனிய கீதம் இசைத்தது
உணவை பகிர்ந்து உண்டது
தோழியர் பெயரை மேசையில் கிறுக்கி இரசித்தது
மாணவ தலைவர்களாக பதவி ஏற்றது
உறுப்படியாக தேடிய நட்புகள் பள்ளியில் மட்டுமே
எனது கண்களில் இருந்து நீர் வருகிறது எனது பாடசாலை நாட்களை இழக்க போகிறேன் என்ற போது......
நான் இழந்த பலவற்றை பெற்றது எனது பள்ளிகூடத்திலே

கருவறை இன்பம் சிலநாட்களே ஆனால் எனது பள்ளியறை எனது இறுதி நாள்வரை நீடிக்கும்
வாழ்வில் இன்பம் என்பது பள்ளியிலே அதிகம்  


வாழ்வில் மறக்கவே முடியாத நாட்கள் மீளவும்  பார்க்க ஆசை படும் நாட்கள் எனது பள்ளி நாட்கள்  

21 மே, 2011

நட்பில்........

ஜீவன் உள்ளவரை மனிதன் 
பணம் உள்ளவரை மரியாதை 
நேசம் உள்ளவரை பாசம் 
என் உயிர் உள்ளவரை நம் நட்பு


இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும் ,
ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை பற்றி தான் நினைக்கும் ...
that is friendship


இன்னொரு பிறவி பிறக்க போவதில்லை 
இன்னொரு நட்பு உன்னை போல கிடைக்க போவதில்லை ,
அதனால் 
இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடுவதில்லை ...





20 மே, 2011

தோழமை

ஆண்டவன் வரைந்த வரைபடம் நட்பு

அதி சிறந்த பரிசு நட்பு
நட்புக்கு நிகர் 
நல்ல நட்பே! 
அழகிய மாடம் நட்பு
தூய்மை அதன் அரண்
மெய்யாய் இருக்கும் வரை 
மெய்க் காவல் நட்பு! 
உன்னை எடை போட 
உன் நட்பு போதுமாகும்
நம்பிக்கை நாணயம் 
சேர்ந்த கலவை நட்பு
துன்பத்தில் சம பங்கு 
நல் நட்பு
உன் விழியில் தூசி 
நட்பின் விழியில் கண்ணீர் 
நல்ல நட்பு 
நாட்பட்டே கிட்டும்

17 மே, 2011

அன்புத் தோழி

Friends Forever
பூத்து உதிர்ந்தப் பூவை
மண்ணில் கண்டேன்..
பூத்தும் உதிராத நட்பை
உன்னில் கண்டேன் 
என் அன்புத் தோழி!

16 மே, 2011

கை கொடு மனிதா


வாழ்கையின்   தொடக்கம் முதல் இறுதி வரை கை கொடுப்பவனே மனிதன்
ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூக்கி விட்டவர்களும் உள்ளார்கள்
 ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூற்றி விட்டவர்களும்  உள்ளார்கள்

வாழ்கையில் நல்லதோ தீயதோ அனைத்தையும் பகிர்வதிற்கு கடவுள் கை கொடுத்து தந்த பரிசு என் இனிய சகோதரி
துன்பங்களில் இருந்து என்னை மீட்ப்பதற்கு கை கொடுத்தது என் உடன் பிறப்பே


9 மே, 2011

தாய் மடியே உன்னை தேடுகிறேன்

கடவுள் உருவம் பெற்று
கடவுளாகவே பூமியில் உதித்தவளே அன்னை
கண்ணை விட சிறந்த உறுப்பு இல்லை
தாயோடு ஒப்பிடத்தக்க தெய்வம் இல்லை
அனைத்திலும் மேலானவளே தாயானவள்
இவ்வுலகில் மனிதராய் பிறந்து புகழ் பெற்று வாழ
வழி காட்டியவள் அன்னையே
கண்டிப்புடன் மட்டும் அல்லாமல் பாசத்தோடும் எங்களை வழிநடத்துபவள் அன்னையே
இந்த பூலோக வாழ்வை எனக்கு பரிசாக தந்ததற்காக என் உயிரிலும் மேலான தாய்க்கு நன்றி
கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது...
பாசமிகு தாயே உன்னை போற்றி பாட இந்த ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாய் மடியை எப்போதும் தேடும் பாசமகளின் இதய வார்த்தைகள்
என்றும் அழியாது என் அன்னையின் நினைவுகள்
"கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது"

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்