24 ஜூலை, 2011

உன்னோடு ஒரு நிமிடம்

பல நிமிடங்கள் சென்றாலும் உன்னோடு நான் கழிப்பது ஒரு நிமிடமாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பொன்னானது தோழி
என் ஜனனம் பூமியில் உதித்ததற்கு கடவுள் தந்த கொடையே என் தோழி
நம் நட்பு நமக்கு  நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தொடர்கிறது
உன்னோடு பேசியது   ஒரு நிமிடமாக இருந்தாலும் கடவுளுக்கு 
நன்றி சொல்வேன் 
நான் இந்த பாரில் என் சகோதரிக்கு அடுத்ததாய் 
நான் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தோழி நீ 
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு  நிமிடமும் எனக்கு மிகவும் பிடிக்கும் தோழி 
எப்போதும்  காத்திருப்பேன் அந்த நிமிடத்திற்காக  என் அன்பு தோழி 
இருந்தும் நீ என்னை விட்டு விலகி செல்லும் நிமிடங்கள் என்னை மிகவும் வாட்டும்..........எப்போதும்  உன்னோடு ஒரு நிமிடம் எனக்கு போதும் என் கவலைகளை மறப்பதற்கு   தோழி ....

23 ஜூலை, 2011

நான் படித்ததில் எனக்கு பிடித்த நட்பு

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!



19 ஜூலை, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை

1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?

  • இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
  • எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
  • மற்றும் அம்மா.. அப்பா......அண்ணா.....அக்கா...
2) நான் விரும்பாத  மூன்று விஷயங்கள்

  • எனக்கு ரொம்ப பிடித்தவர்கள் என்னை திட்டுவது (specially my father)
  • முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...
  • தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை  
3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்

  • எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
  • தமிழை தவறாக பேசுவது 
  • அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்...
4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?

  • ஜோதிகாவின் மொழி 
  • பார்த்தீபனின் கண்ணாடிப்பூக்கள் 
  • சிவாஜியின் கர்ணன்
5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?

  • ஒவ்வொரு  பூக்களுமே.... (ஆட்‌டோகிராப்)
  • முழுமதி அவளது முகமாகும் (ஜோதா அக்பர் )
  • கடவுள் தந்த அழகிய வாழ்வு ... (மாயாவி)
6) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

  • கடவுள் தந்த சுவாசம் 
  • முடிந்த வரை நான் க‌டைபிடிக்கும் உண்மை...
  • என் நியாயமான கோவங்கள்...
7) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?

  • யாருடனாவது சண்டையிட்டபின்  அதை மறந்து விட...
  • செந்தமிழை தெளிவாக ..
  • விதியை வெல்லும் வழி..
8) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?

  • தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
  • அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
  • குழந்தையின் அழுகுரல்...
9) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று காரியங்கள்...?

  • நானும் ஷக்தி பண்பலையும் 
  • என் கவிதைகள்....
  • நான் பாடும் பாடல்கள் (திரைப்பட பாடல் )
10) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

  • பௌதிகவியலில் எறியம்(projectile)
  • ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
  • என்னை நான் வருத்துவது
11) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

  • நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
  • தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
  • என் அண்ணாவை சந்தித்தல்
12) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
  • எனக்கு பலவற்றை புரியவைத்த என் தோழி (என்னுடன் இல்லை)
  • பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய சக்தியின் சொந்தங்கள் 
  • எனக்கு துணையாய் அவதரித்த என் சகோதரி
13) என் தளத்தில் எனக்கு பிடித்த மூன்று பதிவுகள்...?

  • பாடசாலை 
  • தாய் மடியே உன்னை தேடுகிறேன் 
  • நட்சத்திரவீதியில் ஒரு தாலாட்டு பாடவா
 (யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறட்டும்)

5 ஜூலை, 2011

நட்சத்திரவீதியில் ஒரு தாலாட்டு பாடவா

இந்த வரிகளை பார்த்தவுடனே என் மனதில் ஒரு பாசமகனின் ஏக்கம் எப்படி இருக்குமெனவும் ஒரு பாசகவிஞனின் இதயத்தின் வலிகளை வரிகளாகவும் அறிந்து கொண்டேன்

"உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மறுஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ...."

"தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய் 
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?"


"இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ"



these line are very regrettable & heart touchable......
இந்த எதிர்பார்ப்பை தீர்க்க அந்த தந்தை மறுஜென்மத்திலாவது உங்கள் தாலாட்டை கேட்பதற்கு இந்த பூமியில் அவதரிப்பார்....

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்