1 ஜனவரி, 2012

முயற்சி

நான்
பறிக்க விரும்புவது
பூக்களைத்தான் - ஆனால்
உதிர்ந்திடும்
வண்ண பூக்களையல்ல
மின்னிடும்
நட்சத்திர பூக்களை - ஏனெனில்
இருளை அகற்றுவதற்கு
ஒளியை ஏற்றுவதற்கு - ஆனாலும்
உலகிற்கு அல்ல
உள்ளங்களிற்கு - ஏனெனில்
அவைதான் மிகவும்
இருண்டு போய்கிடக்கின்றன

என்னால் முடியவில்லை
என்பதை உணர்கிறேன்
என்னால் முடியாது
என்பதும் தெரியும் -ஆனாலும்
முயல்கிறேன்
முயற்சி திருவினையாக்கும்
என்பது உண்மையாயென
பரிசீலிப்பதற்காக

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்