இன்று உலக தாய்மொழி தினம்,எனது தாய்மொழிக்கான மரியாதையை நான் இன்றாவது செலுத்தி ஆக வேண்டும் ...எனக்கு என் தாய்மொழி சில காலங்களுக்கு முன்பு தான் அதிகமாகபற்று ஏற்பட்டது ..அந்நிய மொழியின் மோகத்தாலோ தெரியவில்லை,என் தாய் மொழியை சில வருடங்களாக மறந்தே இருந்தேன் என்று சொல்லலாம் .
என் தாய்மொழியை பொது இடங்களில் பேசுவதற்கும் மிகவும் சிரமப்பட்டேன்..
இப்போது அதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்...என்றும் என் நாவில் தமிழ் தவிழ வேண்டும்..........
என் தாய்மொழி தமிழுக்கு என் முதல் முத்தம்...........
உன்னையே சுவாசிக்கிறேன்
காணும் இடமெல்லாம்
உன்னை வாரி அணைத்து
முத்தமிட்டு
மனதுக்குள் படித்து
மகிழ்ந்தாலும்
உன்னை உரத்துப் பேசத்தான் ஆசை எனக்கு
ஆனால் உரிமை இழந்தவள்
நான் என்று
நாவுக்குள் உன்னை
உன்னவள் நான் என்று
பெருமை கொண்டாலும்
கண்ணதாசன்
கம்பன் என்று
உன்னைகாதலித்தவர்
பலர் இருக்க
இன்று எனக்கும் போட்டியாய்
வைரமுத்து
வாலி
என்று பல பேர்
உன்மேல் இச்சை கொள்ள
கலங்கவில்லை என் நெஞ்சம்
தமிழே!!
நானும் உன்னால் கவிஞன் தானே என்று.............
