அன்னை பூமியைவிட்டு
அந்நியதேசம் வந்தோம்
ஆனந்த வாழ்க்கையென்று
அவஸ்தையில் வாழ்கின்றோம்
தவங்கள் செய்து
சாபங்கள் பெற்றோம்
யுகங்கள் தோறும்
பாவங்கள் சுமக்கின்றோம்
சொர்க்கம்விட்டு சொர்க்கம்தேடி
நரகம் வந்தோம்
தூக்கம்விற்று துக்கம்வாங்கி
ஏங்கி நிற்கின்றோம்
ஆயிரம் கனவுகளோடு வந்த நாம்
தூக்கத்தை இழந்தோம்
ஆயிரம் ஆசைகளோடு வந்த நாம்
பாஷையை மறந்தோம்
யுத்தம் இங்கே இல்லை
இரத்தம் இங்கே இல்லை -ஆனால்
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்
ஓடியோடி அலைகிறோம்
ஓய்வென்பது இல்லை
தேடித்தேடி தொலைகிறோம்
தேடல் முடியவும் இல்லை
ஆயுதப்போரில்
தப்பிக்கொண்ட நாம்
வாழ்க்கைப்போரில்
மாட்டிக்கொண்டோம்
பணம்மீது மோகம்கொண்டு
மனங்கள் இங்கே சாகிறது
சுயநலங்கள் ஓங்கிக்கொள்ள
பொதுநலங்கள் பொசுங்குகிறது
காலைவாரும் உலகத்திலே
காலடி வைத்தோம்
தோளைக்கொடுத்து தூக்கினால்
தலைமேல் காலால் மிதிக்கிறார்கள்
.jpg)
பண்பு பண்பாடெல்லாம்
பாடையில் ஏறுகிறது
மாண்பு மனிதமெல்லாம்
மடிந்து போகிறது
உள்ளக்கிடங்கில் உணர்வுகள்
புதைந்து போகிறது
உயிரில் கலந்த தாய்மொழியும்
சிதைந்து போகிறது
ஆசையெல்லாம் பூட்டி
சாவியை தொலைத்துவிட்டோம்
ஆடைபூண்ட ஆண்டியாய்
அவணியில் வாழ்கின்றோம்
சுற்றும் முற்றும் பார்த்தால்
சுத்தம் எதுவும் இல்லை
புத்தன் பெற்ற ஞானம்
சித்தம் அடைகிறது
சுற்றும் பூமியின் வேகத்தை
விஞ்சுது எங்கள் வேகம்
சுற்றம் கலந்து சிந்திக்க
சற்றும் இல்லை நேரம்
புத்தம் புதிதாய்
மாறுது பூமி
சித்தம் கலங்கிய பித்தனாய்
ஆகிறான் மனிதன்
ஓய்யாரவாழ்க்கை வாழ்ந்தவரெல்லாம்
ஒற்றை அறைக்குள்ளே
ஒருவரையொருவர் பார்க்காமல்
குடும்பம் நடத்தினம்
அவலம் எங்கள் வாழ்வை
குத்தகைக்கு எடுத்துக்கொண்டது
ஆயுள் முழுவதும் தொடர்வதாக
ஒப்பந்தமும் போட்டது
அகதியாய் நாம் வாழவேண்டுமென்பது
உலக நியதியானது
அணுஅணுவாய் சாகவேண்டுமென்பது
ஆண்டவன் நீதியானது
தாய்த் திருநாடே உன் மடியில்
மடியும் காலமாவது வந்திடுமா ?
அந்நியதேசம் வந்தோம்
ஆனந்த வாழ்க்கையென்று
அவஸ்தையில் வாழ்கின்றோம்
தவங்கள் செய்து
சாபங்கள் பெற்றோம்
யுகங்கள் தோறும்
பாவங்கள் சுமக்கின்றோம்
சொர்க்கம்விட்டு சொர்க்கம்தேடி
நரகம் வந்தோம்
தூக்கம்விற்று துக்கம்வாங்கி
ஏங்கி நிற்கின்றோம்
ஆயிரம் கனவுகளோடு வந்த நாம்
தூக்கத்தை இழந்தோம்
ஆயிரம் ஆசைகளோடு வந்த நாம்
பாஷையை மறந்தோம்
யுத்தம் இங்கே இல்லை
இரத்தம் இங்கே இல்லை -ஆனால்
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறோம்
ஓடியோடி அலைகிறோம்
ஓய்வென்பது இல்லை
தேடித்தேடி தொலைகிறோம்
தேடல் முடியவும் இல்லை
ஆயுதப்போரில்
தப்பிக்கொண்ட நாம்
வாழ்க்கைப்போரில்
மாட்டிக்கொண்டோம்
பணம்மீது மோகம்கொண்டு
மனங்கள் இங்கே சாகிறது
சுயநலங்கள் ஓங்கிக்கொள்ள
பொதுநலங்கள் பொசுங்குகிறது
காலைவாரும் உலகத்திலே
காலடி வைத்தோம்
தோளைக்கொடுத்து தூக்கினால்
தலைமேல் காலால் மிதிக்கிறார்கள்
பண்பு பண்பாடெல்லாம் பாடையில் ஏறுகிறது
மாண்பு மனிதமெல்லாம்
மடிந்து போகிறது
உள்ளக்கிடங்கில் உணர்வுகள்
புதைந்து போகிறது
உயிரில் கலந்த தாய்மொழியும்
சிதைந்து போகிறது
ஆசையெல்லாம் பூட்டி
சாவியை தொலைத்துவிட்டோம்
ஆடைபூண்ட ஆண்டியாய்
அவணியில் வாழ்கின்றோம்
சுற்றும் முற்றும் பார்த்தால்
சுத்தம் எதுவும் இல்லை
புத்தன் பெற்ற ஞானம்
சித்தம் அடைகிறது
சுற்றும் பூமியின் வேகத்தை
விஞ்சுது எங்கள் வேகம்
சுற்றம் கலந்து சிந்திக்க
சற்றும் இல்லை நேரம்
புத்தம் புதிதாய்
மாறுது பூமி
சித்தம் கலங்கிய பித்தனாய்
ஆகிறான் மனிதன்
ஓய்யாரவாழ்க்கை வாழ்ந்தவரெல்லாம்
ஒற்றை அறைக்குள்ளே
ஒருவரையொருவர் பார்க்காமல்
குடும்பம் நடத்தினம்
அவலம் எங்கள் வாழ்வை
குத்தகைக்கு எடுத்துக்கொண்டது
ஆயுள் முழுவதும் தொடர்வதாக
ஒப்பந்தமும் போட்டது
அகதியாய் நாம் வாழவேண்டுமென்பது
உலக நியதியானது
அணுஅணுவாய் சாகவேண்டுமென்பது
ஆண்டவன் நீதியானது
தாய்த் திருநாடே உன் மடியில்
மடியும் காலமாவது வந்திடுமா ?
.jpg)
.jpg)