இன்று வரை தெரியவில்லை நாம் ஏன் இந்த நாட்களில் பேசிக்கொள்ளவில்லை என்று!
எக்காரணமின்றி பிரிதலும் – பின் உணர்ந்து
தோள் சேர்தலும் நட்பில் மட்டும் தான் சாத்தியமா?
பிரிவு தான் புரிதலின் ஆழத்தை அளக்குமா?
நட்பு அன்பின் ஆழத்தை அளக்காதா?
கடந்து வந்த நட்பில்
பிரிவு குறுகியதாகவே தோன்றவில்லை!
நீதான் என் உயிரினும் மேலான
ப்ரியன் என்றல்லவோ இருந்தேன்!
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவை எனக்குச் சொல்லும்
உன் நீண்ட மௌனம்
உன் பிரிவால் எனை வாட்டும்!
அன்று என்ன சொன்னேன் என்று நீ ஏன் விட்டுப் போனாய்
என் தோழமை மறந்து சென்றாய்!
கடல்கள் நமை பிரித்தாலும்
வானம் நமை பிரித்தாலும்
இயற்கையும் சூழ்நிலையும் பிரித்தாலும்
நம் எண்ணங்கள் ஒன்றாகி
அதில் பிரிவேது தோழா
நாம் எங்கிருந்த போதும்
நம் நட்பில் பிரிவேது
இது சாத்தியமா?
1 கருத்து:
Super😘😘
கருத்துரையிடுக