5 மார்ச், 2013

நானும் உலகமும்

நான் 
விரதம் இருக்க பழகிக்கொண்டேன் 
உலகம் - என்னை 
பட்டினி போட பழகிக்கொண்டது 

நான் 
உதவி செய்ய தொடங்கினேன் 
உலகம் - என்னை 
உபயோகிக்க தொடங்கியது 

நான் 
தட்டி கொடுக்க தயாரானேன் 
உலகம் - என்னிடம் 
தட்டி பறிக்க தயாரானது 

நான் 
உணர்வுகளை மதிக்க கற்றுகொண்டேன் 
உலகம் - என் 
உணர்வுகளை மிதிக்க கற்றுக்கொண்டது 

நான் 
சுமைகளை இறக்க வந்தேன் 
உலகம் - என்னில் 
சுமைகளை ஏற்றி விட்டது 

நான் 
ஏற்றி விட துணிந்தேன் 
உலகம் - என்னை 
ஏமாற்றி விட துணிந்தது 

இது தான் 
உலகம் என்று தெரிந்தும் 
நான் என் 
இயல்போடு தான் இருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்