30 ஜூன், 2011

சொந்தக் கையெழுத்து - Autograph of Priya

என்னை விட்டு விலகி செல்லும் பாடசாலை நாட்கள்,
பதினைந்து எமக்கு ராசியானதோ? இல்லையோ?தெரியவில்லை  பதினைந்து பட்டாம்பூச்சி நெஞ்சங்களை ராசியாக்கியது.இந்த பள்ளி சோலை வனம் தான்

நாளை நம் பிரிவால் இது பாலைவனமாகிவிடுமோ? என்ற நினைவே அலைகிறது என் மனதில் !
நிச்சயமாக  நேற்றும் இன்றும் என்றும் சோலை வனமாகவே இருக்கும் எங்கள் பள்ளி நினைவுகள் !

28 ஜூன், 2011

உயிர் கொண்ட நட்புக்கு , கல்லறை போய் சேர்ந்தாலும் பிரிவு என்பது இல்லை......

உயிரின்  சுவாசம்  மூச்சு 
கண்களின்  சுவாசம்  கனவு .
இதயத்தின்  சுவாசம் துடிப்பு .
என்  'நட்பின் ' சுவாசம் ,
நீ  தான் அன்பு தோழி.




11 ஜூன், 2011

நட்பே சிறந்தது


என் இதயத்திற்கும் ,
என் நண்பிக்கும் 
ஒரு ஒற்றுமை உண்டு ,
இருவரும் எனக்காக ,
துடிப்பவர்களை .

நட்பு ஒரு கைக்குழந்தை போல் :
யார் அன்போடு நடந்து கொண்டாலும் 
அவர்களோடு வந்து விடும் 

நிழல்கள் அழிந்தாலும் நட்பின் நிஜங்கள் அழிவதில்லை 

உன் உயிர் போகும்போது 
என் உயிர் தந்து
உன் உயிரை உயிர்பிப்பாள்

வாழ்க்கை

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான்
கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதா எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை


நீ நேசிக்கும் பலர் .... 
உன்னை மறக்க நினைத்தாலும் 
உன்னை நேசிக்கும் சிலரை ... 
நீ நினைக்க மறக்காதே 

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மாறவாதீர்..

.சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட , நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு . உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்

வாழ்கையில் தடுமாறி கொண்டு இருப்பதை விட ,ஒரு முறை விழுந்து எழுவது சிறந்தது.



10 ஜூன், 2011

மௌனம்


 பேசும் வார்த்தையை விட பேசாத
மௌனத்திற்கு  அதிகம்
அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை
எல்லோர்க்கும் புரியும்
மௌனம் மௌனத்தை
நேசிபவர்களுக்கு மட்டும்
தான் புரியும்......

2 ஜூன், 2011

மழையே


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!....



அன்பான ஒருவரிடம் தோற்று பாருங்கள் .. வெற்றியை விட தோல்வி
எத்தனை சுகம் என்று தெரியும் ...!



என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்