ஆயிரம் ஆயிரம் கவியாய் சொன்னேன்....அதில் அழகழகாய் சில பொய்களும் சொன்னேன்....பெண்ணென்றால் தாய் நீ தானே!
ஆயிரம் கவி சொல்லி...கவிஞன் தான் ஆகி என்ன படைத்தவளுக்காக ஒரு கவி பாட முடியவில்லையே...
பத்து திங்கள் சுமந்த தாயை பத்து தடவை நினைத்த போதும்....உன் மனம் இந்த சிறு பேதைக்கு சிக்கவில்லை...
இந்த உலகில் சிறப்பாக வாழ கற்றுத்தந்தாய்,
கல்லறையை கண்டும் அஞ்சாத மனம் தந்தாய்
ஆனால் எனக்கு அழுகை என்பதை கற்றுத்தர மறந்து விட்டாயே அம்மா......
...அன்னையர் தின வாழ்த்துக்கள்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக