22 அக்டோபர், 2013

வீரத்தாயிடம் ஒரு வேண்டுதல்

மண்டாடிகேட்கிறேன்
கொண்டாட முடியாத வெற்றியும் 
திண்டாடுகின்ற தோல்வியும் 
வேண்டவே வேண்டாம் 

ஏமாற்றம் நிறைந்த மாற்றங்களும் 
ஏற்றங்கள் காணும் குற்றங்களும் 
சுற்றம் சூழும் பதற்றங்களும் 
அற்றே போகட்டும்

இயன்றவரை இயலாமை
இறந்தே போகட்டும்
இயலும் என்பது
இவ்வுலகை இயக்கி ஆளட்டும் 

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்