26 அக்டோபர், 2013

அச்சம்

பெண்களின் பலம் 
ஆண்மீது கொள்ளும் அச்சம் 
ஆண்களின் பலவீனம் 
பெண்மீது கொள்ளும் அச்சம் 

பெண்களின் 
ஆயுதம் அச்சம் 
ஆண்களின் 
ஆயுதம் அதிகாரம் 

இதுவே 
கலாச்சாரத்தில் கண்ணியமாகவும் 
காப்பியங்களில் அங்கமாகவும் 
காலந்தோறும் போற்றப்பட்டது 

இன்றைய காலத்தில் 
அச்சமெனும் ஆயுதத்தை 
தூக்கிஎறிந்துவிட்டு 
அதிகாரமெனும் ஆயுதத்தை ஏ 
ந்திக்கொண்டது பெண்னினம் 

அதிகாரம் என்ற ஆயுதத்தை 
இழந்ததினால் அச்சத்திற்குள் 
அடங்கிக்கொண்டது ஆண்ணினம் 

தன் தாய் தந்தைக்கு 
உணவளிக்க அச்சம் 
தன் தம்பி தங்கைக்கு 
உதவி செய்ய அச்சம் - இது 
ஆணினத்திற்கு மட்டுமல்ல 
பெண்னினத்திற்கும் வெட்கம் 

தான் உழைத்தாலும் 
தன் தேவைக்கே 
தன் மனைவியிடம் 
கெஞ்சும் துர்ப்பாக்கிய நிலை சிலஆண்களுக்கு 

மனைவிசொல் மந்திரமானது 
எல்லாம் சக்திமயம் ஆனதால் 
சிவமயமும் பயமயமாகியது 

இலச்சம் இருந்தாலும் 
இலச்சணம் இருந்தாலும் 
அச்சம் இல்லையெனில் அவள் பெண்ணில்லை 

அழகு இருந்தாலும் 
அறிவு இருந்தாலும் 
அடுப்பெரிக்க தெரியாதவள் பெண்ணில்லை 

அச்சமுள்ள பெண் 
உச்சத்தில் வைக்கப்படுவாள் 
அச்சமிலா பெண் 
எச்சத்திற்கு சமம் 

பெண்மையின் மென்மையும் 
பெண்மையின் மேன்மையும் 
அச்சத்தின் தன்மையிலே 
தங்கியிருக்கிறது 

கலாச்சாரத்தின் அச்சாணியே 
பெண்மையின் அச்சம்தான் 

பெண்மை அச்சத்தை இழக்கும்போது 
கலாச்சாரம் முட்டிமோதி உடைந்து போகிறது 

1 கருத்து:

Prathiksha beauty parlour சொன்னது…

ஆண்கள் தன் வாழ் நாளில் மறக்க கூடாத 2 விசயங்கள் .
1. உன்னை கருவில் சுமந்தவளை ..
2.உன் கருவை சுமந்தவளை ....
பெண்மை மேமையானது

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்